பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   280
Zoom In NormalZoom Out


 

வேந்தனைத்
தம்மிற் றீர்த்து வெம்முரண் வென்றி
மகதவன் றங்கை மணிப்பூண் வனமுலை
நுகர விட்டனர் நுண்ணறி விலரெனின்
ஏத மதனா னிகழ்பவை யிவையென
நீதியிற் காட்ட நெடுந்தகை யண்ணல்
வேண்டா மற்றிது மாண்டகைத் தன்றென
மற்றவள் புகுதரு மாடம் புகினே
குற்றம் படுவ கூறக் கேண்மதி
காவ லாளர் கடுகுபு வந்தகத்
தாராய்ந் தெதிர்ப்ப ரருநவை யுறாது
போரார் குருசில் போதர வுண்டெனின்
உருவ மாதர் பெருநலம் பெறுதி
நன்றா வெய்தும் வாயி லவருனை
என்றே யாயினு மிரவல னென்னார்
வேண்டா வதுவென விதியிற் காட்டி
மாண்ட தோழர் மன்னவன் றன்னை
மறுத்த வாயிலொடு வலிப்பனர் கூற
நிறுக்க லாற்றா நெஞ்சின னாகி
வத்தவர் பெருமக னுத்தர நாடி
அடுமுர ணீங்கி யறுபது கழிந்தோர்
கடுவெயில் வந்த காவ லாளர்கண்
மருள்படு வல்லறை மருங்கணி பெற்ற
இருள்படு மாதலி னெற்காண் குறுதல்
அரிய தவர்க்கெனத் தெரியக் காட்டி
வெற்ற வேலான் மற்றுங் கூறினன்
தனக்குநிக ரின்றித் தான்மேம் பட்ட
வனப்பின் மேலும் வனப்புடைத் தாகிக்
கலத்தொடு கவினிக் கண்கவர் வுறூஉம்
நலந்தகு தேற னாணா டோறும்
தலைப்பெரும் புயலாத் தனக்குநசை யுடையதைக்
குலனுஞ் செல்வமு நலனு நாணும்
பயிர்ப்பு முட்கு மியற்கை யேரும்
மடனு மன்பு மாசில் சூழ்ச்சியும்
இடனுடை யறிவு மென்றிவை பிறவும்
ஒல்காப் பெரும்புகழ்ச் செல்வ முடைய