பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   282
Zoom In NormalZoom Out


 

பகையறு குருசிலைப்பண்டுபயின் றன்ன
உவகை யுள்ளமொ டொழுக்க மறாது
கண்ணினுங் கையினு மன்றிநாவின்
இன்னுழி யிருக்கென விருந்த பின்றைக்
கற்றவை யெல்லாந் தெற்றென வினாஅய்த்
தானே கேட்டு வியந்துதலை துளக்கி
ஆனாக் கட்டுரை கழிந்தபின் மேனாட்
டள்ளா வென்றித் தம்மிறை வைத்த
விள்ளா விழுப்பொரு ளுள்வழி யுணரா
மன்னவன் மற்றிது நின்னி னெய்துவேன்
கற்றறி விச்சையிற் காட்டுதல் குறையென
உற்றன னுரைப்ப வுள்வழிந் தெரிந்து
தான்வைத் தனன்போற் காட்டலிற் றருசகன்
ஆனாக் காதலொ டாருயி ரன்ன
தோழ னாகித் தோன்றா தோற்றும்
ஞான நவின்ற நல்லோ னிவனென
எனைத்திவன் வேண்டினுமீவ னென்றுதன்
கணக்குவினை யாளரொடு கரண மொற்றி
அகத்தே யுறைகென வமைத்த பின்னர்
எப்பான் மருங்கினு மப்பா னாடி
அகத்துநீ ருடைய வதனது மாட்சி
மிகுத்தநூல் வகையின் மேவரக் காட்டக்
கன்னியங் கடிநகர் காணவா வுடைய
இளமரக் காவினுள் வளமைத் தாய
நீர்நல னுணர்ந்து சீர்நலக் குருசிற்
கெழுகோ லெல்லையு ளெழுமிது நீர்மற்
றன்றியு மதனது நன்றி நாடின்
நாவிற்கு மினிதாய்த் தீதற வெறியும்
தண்மையு நுண்மையுந் தமக்கிணை யாவன
தெண்ணீ ரெவ்வழித் தேரினு மில்லை
புகழ்வரை மார்பிற் பூந்தா ரண்ணல்
அகழும் பொ