பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   283
Zoom In NormalZoom Out


 

ழுதி னிகழ்வ கேண்மதி
இருமுழத் தெல்லையுள் வரிமுகம் பொறித்த
பொன்னிறத் தேரை போதரும் பின்னர்
மும்முழத் தெல்லையுட் டெண்ணிறங் குயின்றது
தோற்ற மினிதாய் நாற்ற மின்னாப்
பருமண லுண்டது பண்ணுநர் வீழ
உட்கா ழீன்ற வொருகோ லரையின்
எட்பூ நிறத்தொடு கட்கா முறுத்தும்
விளங்கறல் வெள்ளியின் வீசுறு மென்றதன்
அகம்புக் கனன்போ லகன்ற ஞானத்தின்
உண்ணெறிக் கருத்தி னண்ணிய தாகிய
மண்ணின் சுவையு மின்னதென் றொழியா
துரைப்பக் கேட்டே யோங்கிய பெரும்புகழ்த்
திருப்பே ருலகம் பெற்றோன் போல
அகழ்வினை யாளரை யவ்வயிற் றரீஇ
இகழ்வி லத்தொழி லிறைவ னேவப்
பெருமண் வேந்தனைப் பிழைப்பின் றோம்புதற்
குருமண் ணுவாவு முள்ளகத் தொடுங்க
வாய்மொழி யிசைச்சனும் வயந்தக குமரனும்
தேமொழி மாதர் தாய்முதற் கோயிலுள்
தரும நூலுந் தந்துரை கதையும்
பெருமுது கிளவியொடு பிறவும் பயிற்றி
நங்கை விழையு நாளணி கலங்கள்
கொங்கணி மலரிற் கூட்டுவன ருய்த்துச்
சென்றுவந் தாடல் செய்வது வலிப்பப்
பிறவுறு தொழிலொடு மறவோ ரெல்லாம்
ஆய்புக ழரசனை யற்றப் படாமற்
காவல்புரிந் தனராற் கடிமனைக் கரந்தென்.