பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   284
Zoom In NormalZoom Out


 

கரந்த வுருவொடு காவல் புரிந்தவர்
ஒடுங்குதல் வலித்துடன் போகிய பின்றை
முனைவெந் துப்பின் மன்னனு முன்போல்
புனைவகை மாடம் புக்குமறைந் திருத்தலின்
தண்டடு திண்டோட் குருசிலைத் தன்னொடு
கொண்டுட் போகுங் குறிப்பின ளாகித்
தீது தீண்டாத் தெரிவொடு புகுதரும்
வாயி னாடி வைய நீக்கிப்
பல்வகைத் தான நல்குக மின்றென
எல்லிற் போதர லியையு மாதலிற்
சிலத மாக்களொடு சிவிகை வருகென
அலர்ததை யைம்பா லணியிழை யேறிப்
போந்தன ளாகிப் பூந்தண் கானத்துள்
எழுதுவினை மாடத்து முழுமுத லிழிந்து
தாமகத் திருக்கு மாமணிப் பேரறை
வாயில் சேர்வுற வையம் வைக்கென
அமைத்தன ளாகி யவ்வயி னொடுங்கிய
சினப்போ ரண்ணலொடு வளப்பா டெய்தி
அப்பகல் கழிந்த பின்றை மெய்ப்பட
மாண்டகு கிளவி பூண்ட நோன்பிற்
கன்றுகடை யாதலிற் சென்றோர் யார்க்கும்
மணியு முத்தும் பவழமு மாசையும்
அணியு மாடையு மாசி லுண்டியும்
பூவு நானமும் பூசுஞ் சாந்தமும்
யாவை யாவை யவையவை மற்றவர்
வேண்டே மெனினு மீண்ட வீசலின்
இந்நில வரைப்பிற் கன்னியர்க் கொத்த
ஆசி லாசிடை மாசில மாண்பின்
மந்திர நாவி னந்த ணாளரும்
அல்லோர் பிறருஞ் சொல்லுவனர் போயபின்
கோலக் காமன் கோட்டத் தகவயின்
மாலை யாமத்து மணிவிளக் கிடீஇ
மோகத் தான முற்றிழை கழிந்த பின்
மரபறி மகளிர் பற்றினர் பாடக்
கரு