பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   286
Zoom In NormalZoom Out


 

படியணி
பெருங்கடை காவலர் பெருமான் றங்கை
கருங்கடை மழைக்கட் கனங்குழைப் பாவை
முடித்த நோன்பி னெடித்தவகை யறியார்
இருளின் குற்றங் காட்டி நங்கை தன்
உரிமையுள் படுநரைக் கழறுவன ராகி
முழுநிலைக் கதவ மகற்றிமுன் னின்று
தொழுத கையர் புகுதுகென் றேத்த
வாயில் புக்குக் கோயில் வரைப்பிற்
கன்னி மாடத்து முன்னறை வைத்தலின்
பகலே யாயினும் பயிலா தோர்கள்
கவலை கொள்ளுங் கடிநிழற் கவினி
மாடெழு மைந்தரு மூடு சென்றாடா
அணியிற் கெழீஇ யமர ராடும்
பனிமலர்க் காவின் படிமைத் தாகி
இருளொடு புணர்ந்த மருள்வரு மாட்சித்
தன்னகர் குறுகித் துன்னிய மகளிரை
அகல்க யாவிரு மழலு மெனக்கெனத்
திலக முகத்தி திருந்துபடந் திறந்து
கூன்மகள் வீச வானா வகத்தே
தக்க வெல்லை யிரத்தலின் மிக்க
காழகி னறும்புகை யூழ்சென் றுண்ட
மணிக்காற் கட்டிலுள் வல்லோள் படுத்த
அணிப்பூஞ் சேக்கை யறைமுத லாகப்
பக்கமுந் தெருவும் புக்கமுறை பிழையா
தாராய்ந் தந்தணி யமைத்ததன் பின்றைப்
பேரிசை யண்ணலும் பெருநல மாதரும்
ஆரிருள் போர்வை யாக யாவரும்
அறிதற் கரிய மறையரும் புணர்ச்சியொடு
கரப்பறை யமைத்துக் கைபுனைந் தோர்க்கும்
உரைக்க லாகா வுறுபொறிக் கூ