பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   288
Zoom In NormalZoom Out


 

யுணர்ந்து
தெளிதல் செல்லாத் தெவ்வ னிவனெனின்
அளியியற் செங்கோ லரசுமுதல் வவ்வலும்
எளிதெனக் கென்னு மெண்ணின னாகிப்
பெண்பாற் சூழ்ச்சியிற் பிழைப்புப் பலவெனும்
நுண்பா னூல்வழி நன்கன நாடின்
ஏத மில்லை யிதுவெனத் தேறி
மாதர் மாட்டு மகிழ்ச்சியொடு தெளிதல்
நீதி யன்றென நெஞ்சத் தடக்கிச்
செருக்கிய னெடுங்கண் செவ்வி பெற்றாங்
குரத்தகை யண்ண லுறைவது வலிப்பத்
தவ்வை யாயினுந் தாயே யாயினும்
செவ்வி யறியார் சென்றுமெய் சாரிற்
காட்டக் காணாள் கதம்பா டேற்றி
வாட்கட் பாவை மருவற் கின்னாக்
காட்சிய ளாகிக் கருதுவ தெதுவெனின்
வீயா நண்பின் வேத மகளுழை
யாழும் பாட்டு மவைதுறை போகக்
கற்றல் வேண்டு மினியெனக் கற்பதற்
கன்புடை யருண்மொழி யடைந்தோ ருவப்ப
நன்பல பயிற்றிய நாவின ளாகி
அமிழ்தி னன்ன வறுசுவை யடிசிலும்
இவணே வருக வின்று முதலெனத்
தமர்வயி னேய தன்மைய ளாகி
மழையயா வுயிர்க்கும் வான்றோய் சென்னி
இழையணி யெழுநிலை மாடத் துயரறை
வாள்வரி வயமான் மூரி நிமிர்வின்
நிலைக்கா லமைந்த நிழறிகழ் திருமணி
கயிற்குரல் வளைஇய கழுத்திற் கவ்விய
பவழ விழிகைப் பத்திக் கட்டத்துப்
பட்டுநிணர் விசித்த கட்டமை கட்டிலுட்
பொழுதிற் கொத்த தொழில வாகி
எழுதுவினைப் பொலிந்த விழுது