னு மெழில்பட விரீஇ ஏமச் செவ்வி யேஎர் நுகரும் யாமத் தெல்லையுண் மாமறைப் பேரறை உலாவு முற்றத் தூழ்சென் றாட நிலாவிரி கதிர்மணி நின்று விளக்கலும் பள்ளி தன்னுள் வள்ளிதழ்ப் போதையொடு மன்னய முரைத்து நன்னலங் கவர்ந்து வித்தக ரெழுதிய சித்திரக் கொடியின் மொய்த்தலர் தாரோன் வைத்துநனி நோக்கிக் கொடியின் வகையுங் கொடுந்தாண் மறியும் வடிவமை பார்வை வகுத்த வண்ணமும் திருத்தகை யண்ணல் விரித்துநன் குணர்தலின் மெய்பெறு விசேடம் வியந்தன னிருப்பக் கைவளர் மாதர் கனன்றுகனன் றெழுதரும் காம வேகந் தான்மிகப் பெருகப் புலவி நெஞ்சமொடு கலவியுட் கலங்கிப் புல்லுகை நெகிழப் புணர்வுநனி வேண்டாள் மல்லிகைக் கோதை மறித்தன ளிருந்து சூட்டுமுகந் திருத்தி வேட்டுநறு நீரின் மயிரு மிறகுஞ் செயிரறக் கழீஇக் கோனெய் பூசித் தூய்மையு ணிறீஇப் பாலுஞ் சோறும் வாலிதி னூட்டினும் குப்பை கிளைப்பறாக் கோழி போல்வர் மக்க ளென்று மதியோ ருரைத்ததைக் கண்ணிற் கண்டே னென்று கைந்நெரித் தொண்ணுதன் மாத ருருகெழு சினத்தள் தம்மால் வந்த தாங்கரும் வெந்நோய் தம்மை நோவ தல்லது பிறரை என்னது நோவ லேத முடைத்தெனக் கருங்கே ழுண்கண் கயலெனப் பிறழ்ந்து பெருங்கயத் தாமரைப் பெற்றிய வாகத் திரு

|