நுதல் வியர்ப்பெழுந் திருநிலத் திழிதர நிலாவுறு திருமுக நிரந்துடன் மழுங்கிக் கருமயி ரிவர்ந்து காண்டகக் குலாஅய்ப் புருவம் பலகால் புடைபுடை பெய முத்துற ழாலி தத்துவன தவழ்ந்து பொன்னிறக் குரும்பை தன்னிற மழுங்கத் தன்னிறங் கரப்பத் தவாஅ வெம்மையொடு வீழனல் கடுப்ப வெய்துயிர்த் தலைஇக் காதல்செய் கலங்கள் போதொடு போக்கி அந்தண் சாந்த மாகத்துத் திமிர்ந்து பண்புரை கிளவி பையெனத் திரியக் கரும்பேர் கிளவி கதிர்முகை முறுவற் பெருந்தடங் கண்ணி பிழைப்பொன் றுணரேன் வருந்தல் வேண்டா வாழிய நங்கையென் றிரந்தன னாகி யேற்பக் காட்டிய இலம்புடை நறுமல ரெழுதுகொடிக் கம்மத்துச் சிலம்பிடைத் தங்கிய சேவடி யரத்தம் காரிருங் குஞ்சி கவின்பெறத் திவள அரவுவாய்க் கிடப்பினு மலர்கதிர்த் தண்மதிக் குருவுக்கதிர் வெப்ப மொன்று மில்லை சிறியோர் செய்த சிறுமையுண் டெனினும் தரியாது விடாஅர் தாநனி பெரியோர் என்பது சொல்லி யெழில்வரை மார்பன் பொன்புனை பாவை புறக்குடை நீவிச் செங்கையிற் றிருத்திப் பைந்தோ டணிந்து கலம்பல திருத்தி நலம்பா ராட்டிச் சாந்த மெழுகிச் சாயனெகிழ் பறிந்து பூம்புறங் கவவப் புனைதா ரோதி பூண்ட பூணொடு பொறையொன் றாற்றேன் தீண்டன்மின் பெருமவெனத் தீரிய வுரைத்து மாடத் தகத்தி லாடுவினைக் காவினுட் கொம்பர் மீமிசைக் கூகைவந் துலாஅய் வித்தகக் கை

|