வினைச் சத்தி யேறி உட்குத்தக வுரைத்தலுங் கட்கின் பாவை நெஞ்சந் துட்கென நெடுவிடை நின்ற காற்றெறி வாழையி னாற்ற நடுங்கி அஞ்சி லோதி யாகத் தசைத்தர அச்ச முயக்க நச்சுவனன் விரும்பி மெல்லியன் மாதரொடு மேவன கிளந்து புல்லியுந் தளைத்தும் புணர்ந்தும் பொருந்தியும் அல்குலு மாகமு மாற்றநலம் புகழ்ந்தும் அமர ராக்கிய வமிழ்தெனக் கினையோள் தன்முளை யெயிற்றுநீர் தானென வயின்றும் ஒழுகா நின்ற காலை யொருநாள் இன்பப் பேரறை நன்பகற் பொருந்தி அருமறை யறிதற் கமைந்த வார்வத் தொருதுணைத் தோழியை யொன்றுவனள் கூவித் திருவிற் கமைந்த தேந்தார் மார்பன் உருவிற் கமைந்த வுணர்வுநன் குடைமை அளத்து நாமெனத் துளக்கிலள் சூழ்ந்து பலர்புகழ் மார்பன் பயின்ற விச்சைகள் வல்லவை யாய்கென வழிபா டாற்றி நல்லவை யாவென நகைக்குறிப் பூர்தர வினவிய மகளிர்க்குச் சினவுநர்ச் சாய்த்தவன் வேத விழுப்பொரு ளோதின ருளரெனின் எனைத்துங் கரவேன் காட்டுவென் யானென எமக்கவை யென்செயு மிசையொடு சிவணிய கருவிக் கரண மருவினை யோவென நீத்தவர் வேண்டிய துப்புர வல்லால் பார்ப்பன மக்கள் பரிந்துபிற பயிற்றார் வேள்விக் குரிய கருவி யாவும் வாளேர் கண்ணி வல்லேன் யானென நல்லதொன் றுண்டெனிற் சொல்லலெங் குறையென

|