த் தோளுறு துணைவிக்குத் துயரம் வந்தநாள் சூளுறு கிளவியிற் றொழுதனள் கேட்ப இடவரை யருவியி னிம்மென விசைக்கும் குடமுழ வென்பது பயிற்றினென் யானென அவைக்குரி விச்சை வல்ல வந்தணன் சுவைத்தொழின் மகனென நகைத்தொழி லாடி அந்தர மருங்கி னமர ராயினும் மந்திர மறப்ப மனநனி கலக்கும் பைந்தொடி பயிற்றும் பண்யாழ் வருகெனத் தந்துகைக் கொடுக்கலுந் தண்பூங் கொடிபோல் எதிர்முகம் வாங்கி யெழினி மறைஇப் பதுமா நங்கையும் பையெனப் புகுந்து கோன்மணி வீணை கொண்டிவ ணியக்கத் தான மறிந்தி யாப்பி யாயினி நீநனி பாடென நேரிழை யருளித் துணைவன் முன்னதன் றொன்னலந் தோன்றக் கணைபுணர் கண்ணி காட்டுதல் விரும்பி ஒள்ளுறை நீக்கி யொளிபெறத் துடைத்து வன்பிணித் திவவு வழிவயி னிறுத்த மெல்விர னோவப் பல்கா லேற்றி ஆற்றா ளாகி யரும்பெறற் றோழியைக் கோற்றேன் கிளவி குறிப்பிற் காட்டக் கொண்டவள் சென்று வண்டலர் தாரோய் வீணைக் கேற்ப விசையொடு மற்றிவை தானத் திரீஇத் தந்தீ கெமக்கெனக் குலத்தொடும் வாராக் கோறரும் விச்சை நலத்தகு மடவோய் நாடினை யாகின் அலைத்தல் கற்றல் குறித்தேன் யானென மற்போர் மார்பவிது கற்கல் வேண்டா வலியி னாவது வாழ்கநின் கண்ணி தரித்தர லின்றிய விவற்றை யிவ்விடத் திருத்த லல்லது வே

|