ண்டலம் யாமென அன்ன தாயி னாமெனிற் காண்கம் பொன்னிழை மாதர் தாவெனக் கொண்டு திண்ணிய வாகத் திவவுநிலை நிறீஇப் பண்ணறி வுறுத்தற்குப் பையெனத் தீண்டிச் சுவைப்பட நின்றமை யறிந்தே பொருக்கெனப் பகைநரம் பெறிந்து மிகையுறப் படூஉம் எள்ளற் குறிப்பினை யுள்ளகத் தடக்கிக் கோடும் பத்தலுஞ் சேடமை போர்வையும் மருங்குலும் புறமுந் திருந்துதுறைத் திவவும் விசித்திரக் கம்மமு மசிப்பில னாகி எதிர்ச்சிக் கொவ்வா முதிர்ச்சித் தாகிப் பொத்தகத் துடையதாய்ப் புனனின் றறுத்துச் செத்த தாருச் செய்தது போலும் இசைத்திற னின்னா தாகிய திதுவென மனத்தி னெண்ணி மாசற நாடி நீட்டக் கொள்ளாண் மீட்டவ ளிறைஞ்சிக் கொண்ட வாறுமவன் கண்ட கருத்தும் பற்றிய வுடனவ னெற்றிய வாறும் அறியா தான்போன் மெல்ல மற்றதன் உறுநரம் பெறீஇ யுணர்ந்த வண்ணமும் செறிநரம் பிசைத்துச் சிதைத்த பெற்றியும் மாழை நோக்கி மனத்தே மதித்தவன் அகத்ததை யெல்லா முகத்தினி துணர்ந்து புறத்தோ னன்மை திறப்படத் தெளிந்து தாழிருங் கூந்தற் றோழியைச் சேர்ந்திவன் யாழறி வித்தக னறிந்தரு ளென்றலின் இன்னுஞ் சென்றவ னன்ன னாகுதல் நன்னுத லமர்தர நாடிக் காண்கெனப் பின்னுஞ் சேர்ந்து பெருந்தகை யெமக்கிது பண்ணுமை நிறீஇயோர் பாணிக் கீதம் பாடல் வேண்டுமென் றாடமைத் தோளி மறுத்துங் குறைகொள மறத்தகை மார்பன் என்

|