பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   295
Zoom In NormalZoom Out


 

கட் கிடந்த வெல்லா மற்றிவள்
தன்கண் மதியிற் றான்றெரிந் துணர்ந்தனள்
பெரிதிவட் கறிவெனத் தெருமந் திருந்திது
வல்லுந னல்லே னல்லோய் நானென
ஒருமனத் தன்ன வுற்றார்த் தேற்றா
அருவினை யில்லென வறிந்தோர் கூறிய
பெருமொழி மெய்யெனப் பிரியாக் காதலொ
டின்ப மயக்க மெய்திய வெம்மாட்
டன்புதுணை யாக யாதொன் றாயினும்
மறாஅ தருளென வுறாஅன் போல
அலங்குகதிர் மண்டில மத்தஞ் சேரப்
புலம்புமுந் துறுத்த புன்கண் மாலைக்
கருவி வானங் கால்கிளர்ந் தெடுத்த
பருவம் பொய்யாப் பைங்கொடி முல்லை
வெண்போது கலந்த தண்கண் வாடை
பிரிவருங் காதற்குக் கரியா வதுபோல்
நுண்சா லேக நுழைந்துவந் தாட
ஆராக் காதலிற் பேரிசை கனியக்
குரலோர்த்துத் தொடுத்த குருசி றழீஇ
இசையோர் தேய வியக்கமும் பாட்டும்
நசைவித் தாக வேண்டுதிர் நயக்கெனக்
குன்றா வனப்பிற் கோட பதியினை
அன்றாண்டு நினைத்தஃ தகன்ற பின்னர்
நலத்தகு பேரியாழ் நரம்புதொட் டறியா
இலக்கணச் செவ்விர லேற்றியு மிழித்தும்
தலைக்கட் டாழ்வு மிடைக்க ணெகிழ்ச்சியும்
கடைக்கண் முடுக்குங் கலந்த கரணமும்
மிடறு நரம்பு மிடைதெரி வின்றிப்
பறவை நிழலிற் பிறர்பழித் தீயாச்
செவிச்சுவை யமிர்த மிசைத்தலின் மயங்கி
மாடக் கொடிமுடி மழலையம் புறவும்
ஆடமை பயிரு மன்னமுங் கிளியும்
பிறவு மின்னன பறவையும் பறவா
ஆடுசிற கொடுக்கி மாடஞ் சோரக்
கொய்ம்மலர்க்