ண்பி னிவன்போல் விரித்து நுனித்துரை மாந்த ரில்லென நுவன்று மன்றப் புகன்று மாழை நோக்கி மறித்தும் போகி நெறித்துநீர்த் தொழுகிப் பொன்றிரித் தன்ன நிறத்தன சென்றினி தொலித்த லோவா நலத்தகு நுண்ணரம் பாவன கொடுப்ப மேவனன் விரும்பிக் கண்டே யுவந்து கொண்டதற் கியைய ஓர்த்தன னமைந்துப் பேர்த்தனன் கொடுப்ப வணங்குபு கொண்டு மணங்கம ழோதி மாதர் கைவயிற் கொடுப்பக் காதல் உள்ளங் குளிர்ப்ப வூழி னியக்கக் கூடிய குருசில் பாடலின் மகிழ்ந்து கோடுயர் மாடத்துத் தோடுயர் தீரக் குறிவயிற் புணர்ந்து நெறிவயிற் றிரியார் வாயினுஞ் செவியினுங் கண்ணினு மூக்கினும் மேதகு மெய்யினு மோத லின்றி உண்டுங் கேட்டுங் கண்டு நாறியும் உற்று மற்றிவை யற்ற மின்றி ஐம்புல வாயிலுந் தம்புலம் பெருக வைக றோறு மெய்வகை தெரிவார் செய்வளைத் தோளியைச் சேர்ந்துநல னுகர்வதோர் தெய்வங் கொல்லெனத் தெளித லாற்றார் உருவினு முணர்வினு மொப்போ ரில்லென வரிவளைத் தோளியொடு வத்தவர் பெருமகன் ஒழுகினன் மாதோ வொருமதி யளவென். ஒழுகா நின்ற வொருமதி யெல்லையுள் வழிநா ணிகழ்வின் வண்ணங் கூறுவேன் கலக்கமி றானைக் காசியர் கோமான் நலத்தகு தேவி நன்னாட் பெற்ற மின்னுறழ் சாயற் பொன்னுறழ் சுணங்கிற் பண்ணுறு மின்சொற் பது

|