பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   298
Zoom In NormalZoom Out


 

ண்பி னிவன்போல் விரித்து
நுனித்துரை மாந்த ரில்லென நுவன்று
மன்றப் புகன்று மாழை நோக்கி
மறித்தும் போகி நெறித்துநீர்த் தொழுகிப்
பொன்றிரித் தன்ன நிறத்தன சென்றினி
தொலித்த லோவா நலத்தகு நுண்ணரம்
பாவன கொடுப்ப மேவனன் விரும்பிக்
கண்டே யுவந்து கொண்டதற் கியைய
ஓர்த்தன னமைந்துப் பேர்த்தனன் கொடுப்ப
வணங்குபு கொண்டு மணங்கம ழோதி
மாதர் கைவயிற் கொடுப்பக் காதல்
உள்ளங் குளிர்ப்ப வூழி னியக்கக்
கூடிய குருசில் பாடலின் மகிழ்ந்து
கோடுயர் மாடத்துத் தோடுயர் தீரக்
குறிவயிற் புணர்ந்து நெறிவயிற் றிரியார்
வாயினுஞ் செவியினுங் கண்ணினு மூக்கினும்
மேதகு மெய்யினு மோத லின்றி
உண்டுங் கேட்டுங் கண்டு நாறியும்
உற்று மற்றிவை யற்ற மின்றி
ஐம்புல வாயிலுந் தம்புலம் பெருக
வைக றோறு மெய்வகை தெரிவார்
செய்வளைத் தோளியைச் சேர்ந்துநல னுகர்வதோர்
தெய்வங் கொல்லெனத் தெளித லாற்றார்
உருவினு முணர்வினு மொப்போ ரில்லென
வரிவளைத் தோளியொடு வத்தவர் பெருமகன்
ஒழுகினன் மாதோ வொருமதி யளவென்.
ஒழுகா நின்ற வொருமதி யெல்லையுள்
வழிநா ணிகழ்வின் வண்ணங் கூறுவேன்
கலக்கமி றானைக் காசியர் கோமான்
நலத்தகு தேவி நன்னாட் பெற்ற
மின்னுறழ் சாயற் பொன்னுறழ் சுணங்கிற்
பண்ணுறு மின்சொற் பது