பொங்குமலர் நறுந்தார்ச் சங்கர வரசனும் மல்ல னென்னும் வெல்போர் விடலையும் தானை மன்னரை மானம் வாட்டிய ஊனிவர் நெடுவே லுருவக் கழற்காற் பொங்குமயிர் மான்றேர்த் திருநகர்க் கிறைவன் வெந்திறற் செய்கை வேசா லியுமென அடற்றகை மன்னர் படைத்தொகை கூட்டிச் சங்க மாகி வெங்கணை வீக்கமொடு பகைநமக் காகிப் பணித்துத் திறைகொளும் மகத மன்னனை மதுகை வாட்டிப் புரிபல வியைந்த வொருபெருங் கயிற்றினிற் பெருவலி வேழம் பிணித்திசி னாஅங் கிசைந்த பொழுதே யிடங்கெட மேற்சென் றருந்திறன் மன்னனை நெருங்கின மாகித் தன்னுடை யானையும் புரவியுந் தன்றுணைப் பொன்னியல் பாவையும் புனைமணித் தேரும் அணிகதிர் முத்தமு மருங்கல மாதியும் பணிமொழிச் செவ்வாய்க் கணிகை மகளிரொடு பிறவு மின்னவை முறைமையிற் றரினும் இருங்கண் மாதிரத் தொருங்குகண் கூடிய கருமுகில் கிழிக்குங் கடுவளி போலப் பொருமுரண் மன்னர் புணர்ப்பிடைப் பிரிக்கும் அறைபோக் கமைச்சின் முறைபோக் கெண்ணினும் அங்கண் ஞாலத் தழகுவீற் றிருந்த கொங்கலர் கோதை யெங்கையைப் பொருளொடு தனக்கே தருகுவன் சினத்தி னீங்கி ஊனங் கொள்ளாது தானவட் பெறுகெனத் தேறு மாந்தரை வேறவண் விடுத்துத் தனித்தர வொரு

|