பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   303
Zoom In NormalZoom Out


 

வரைத் தன்பாற் றாழ்ப்பினும்
என்ன வாயினு மன்னது விழையா
தொடுங்கி யிருந்தே யுன்னியது முடிக்கும்
கொடுங்காற் கொக்கின் கோளின மாகிச்
சாய்ப்பிட மாகப் போர்ப்படை பரப்பி
வலிகெழு வேந்தனை வணக்குது மென்னத்
தெளிவுசெய் தெழுந்து திருமலி நன்னாட்
டெல்லை யிகந்து வல்லை யெழுந்து
கடுந்தொழின் மேவலொ டுடங்குவந் திறுத்தலின்
அகநகர் வரைப்பி னரச னறியப்
புறநக ரெல்லாம் பூசலிற் றுவன்றி
அச்ச நிலைமை யரசற் கிசைத்தலின்
மெச்சா மன்னரை மெலிவது நாடித்
தருசகன் றமரொடு தெருமர லெய்தி
மாணகற் கண்டிந் நிலைமை கூறென
ஆண நெஞ்சத் தயிரா பதிவந்
தனங்கத் தானம் புகுந்தவற் கண்டு
கூப்பிய கையினள் கோயிலுட் பட்டதும்
கோற்றொடி மாதர் கொள்கையுங் கூற
உகவை யுள்ளமொடு பகையிவ ணியைதல்
கரும நமக்கென வுருமண் ணுவாவுரைத்
தின்ன தென்னான் பொன்னேர் தோழிக்
கிருமதி நாளகத் திலங்கிழை மாதர்
பருவரல் வெந்நோய் பசப்பொடு நீக்குவென்
என்றன னென்பதைச் சென்றனை கூறிக்
கவற்சி நீக்கெனப் பெயர்த்தவட் போக்கிக்
கடுத்த மன்னரைக் கலங்கத் தாக்கி
உடைத்த பின்றை யல்லது நங்கையை
அடுத்தல் செல்லா னரச னாதலின்
அற்ற நோக்கி யவர்படை யணுகி
ஒற்றி மேல்வீழ்ந் துடைக்கு முபாயமா
வா