ணிக வுருவின மாகி மற்றவர் ஆணத் தானை யகம்புக் காராய்ந் திரவிடை யெறிந்து பொருபடை யோட்டிக் கேட்போர்க் கெல்லாம் வாட்போர் வலித்தொழில் வளமிகு தானை வத்தவர்க் கிறையைக் கிளைமை கூறி யுளமை கொளீஇக் காவினு ணிகழ்ந்தது காவலற் குரைப்பின் மன்றல் கருதி வந்த மன்னற் கொன்றுபு கொடாமை யுண்டு மாகும் ஒன்றின னாயிற் பொன்றுஞ் சிளமுலைத் தெரியிழை மாத ருரிமையி னோடாள் அன்ன தாத லொருதலை யதனாற் பின்னரு மதற்குப் பிறபிற நாடுதும் இன்னே யெழுகென் றெழுந்தாங் கணைஇச் சின்னச் சோலை யென்னு மலைமிசைப் பன்னற் கேள்வி பண்வரப் பாடிட எண்ணிய கருமத் திடையூ றின்மை திண்ணிதிற் கேட்டுத் தெளிந்தன ராகி ஆனா வன்பொடு மேனா ளன்றி லழிவழி வந்த கழிபெருங் காதற் பகையடு படைநரைத் தொகையவட் காண்புழி நூற்றிற முற்றி யாற்றுளி பிழையா தாற்றி னறிய வத்துணை யுண்மையின் ஊறின் றினியென வுவகையிற் கழுமிக் கரப்பில் வண்மைப் பிரச்சோ தனன்றன் சினப்படை யழித்த செம்ம லாளர்க்குக் கனப்படை காக்கைத் தொகையெனக் கருதும் அத்திறத் தொன்றி யெத்திறத் தானும் குவளை யுண்க ணிவளொடு புணர்ந்த காலை யல்லது கோலக் குருசில் புலம்பிற் றீரா னாதலிற் பொருபடை கலங்கவாட் டுதலெனக் கருத்திடை வலித்து மலையி னிழிந்து விலைவரம் பறியா அருவிலை நன்மணி போத்தந் தவ்வழிப்

|