பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   305
Zoom In NormalZoom Out


 

பெருவிலைப் பண்டம் பெய்வது புரிந்து
செழுமணிக் காரர் குழுவினுட் காட்டி
உறுவிலை கொண்டு பெறுவிலை பிழையா
வெண்பூந் துகிலுஞ் செம்பூங் கச்சும்
சுரிகையும் வாளு முருவொடு புணர்ந்த
அணியின ராகிப் பணிசெயற் குரிய
இளையரை யொற்றித் தளைபிணி யுறீஇப்
பல்லுறைப் பையி னுள்ளறை தோறும்
நாகத் தல்லியு நயந்ததக் கோலமும்
வாசப் பளிதமுஞ் சோணப் பூவும்
குங்குமக் குற்றியுங் கொழுங்காற் கொட்டமும்
ஒண்காழ்த் துருக்கமு மொளிநா குணமும்
காழகி னூறுங் கட்சா லேகமும்
கோழிரு வேரியும் பேரில வங்கமும்
அந்தண் டகரமு மரக்கு மகிலும்
சந்தனக் குறையொடு சாந்திற் குரியவை
பிறவு மொருவா நிறைய வடக்கி
முதிர்பழ மிளகு மெதிர்வது திகழ்ந்த
மஞ்சளு மிஞ்சியுஞ் செஞ்சிறு கடுகும்
தலைப்பெருங் காயமு நலத்தகு சிறப்பின்
சீரகத் தரிசியு மேலமு மேனைக்
காயமு மெல்லா மாய்வன ரடக்கி
அஞ்சன மனோசிலை யணியரி தாரம்
துத்த மாஞ்சி யத்தவத் திரதம்
திப்பிலி யிந்துப் பொப்புமுறை யமைத்துத்
தாழி மேதை தவாத துவர்ச்சிகை
வண்ணிகை வங்கப் பாவையோ டின்ன
மருத்துறுப் பெல்லா மொருப்படுத் தடக்கி
இலைச்சினை யொற்றிய தலைச்சுமைச் சரக்கினர்
நான மண்ணிய நீனிறக் குஞ்சியர்
மணிநிறக் குவளை யணிமலர் செரீஇ
யாப்புற வடக்கிய வாக்கமை சிகையினர்
மல்லிகை யிரீஇ வல்லோர் புணர்ந்த
செம்பொன் மாத்திரை செரீஇய