பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   306
Zoom In NormalZoom Out


 

காதினர்
அங்கதிர்ச் சுடர்மணி யணிபெற விரீஇ
மாசின் றிலங்கு மோதிர விரலினர்
வாச நறும்பொடி திமிர்ந்த மார்பினர்
மகரிகை நிறைய வெகிர்முக மாக்கிப்
பாடி மகளிர் விழையுஞ் சேடொளிப்
பத்திக் கடிப்பும் பவழத் திரியும்
முத்து வடமு முழுமணிக் காசும்
பன்மணித் தாலியு மென்முலைக் கச்சும்
உத்திப் பூணு முளப்படப் பிறவும்
சித்திரக் கிழியின் வித்தக மாகத்
தோன்றத் தூக்கி யாங்கவை யமைத்து
நாற்றிய கைய ரேற்றிய கோலமொடு
நுரைவிரித் தன்ன நுண்ணூற் கலிங்கம்
அரைவிரித் தசைத்த வம்பூங் கச்சொடு
போர்ப்புறு மீக்கோள் யாப்புறுத் தசைஇப்
பொற்றொடி நிறைக்கோல் பற்றிய கையினர்
கழலுங் கச்சுங் கலிங்கமு மற்றவர்
விழைவன வறிந்து வேறுவே றடக்கிக்
காட்சிமுந் துறுத்த மாட்சிய ராகிப்
படைத்திற மன்னர் பாடி சார்ந்து
விடைப்பே ரமைச்சன் மேனாட் போக்கிய
அறிவொடு புணர்ந்த விசைச்சனு மவ்வழிக்
குறிவயிற் பிழையாது குதிரையொடு தோன்றலும்
அதிராத் தோழனை யவணே யொழித்துக்
குதிரை யாவன கொண்டுவிலை பகரிய
வழவில் சூழ்ச்சி வயந்தக குமரனைக்
குழுவினோர் கட்குத் தலையெனக் கூறி
வெம்முரண் வென்றியொடு மேல்வந் திறுத்த
ஒன்னா ராடற் கொருப்பா டெய்தி
வழக்கொடு புணர்ந்த வாசி வாணிகம்
உழப்பே மற்றிவ னொன்பதிற் றியாட்டையன்
மண்டமர்த்