தானை மகத மன்னனும் பண்டையன் போலா னாதலிற் படையொடு தொன்னகர் வரைப்பக மெந்நக ராக்க இருந்தனம் வலித்தனம் யாமெனப் பலவும் பொக்க முடையவை பொருந்தக் கூறிப் பகைகொண் மன்ன னகநகர் வரைப்பின் யாவ ராயினு மறிந்துவந் தடைவது காணுங் காலைக் கரும நமக்கெனக் கணங்கொண் மன்னரு மிணங்குவன ராகிப் பெரும்பரி சார மொருங்குட னருளி அற்ற மவர்மாட் டொற்றின ராகி அருத்த மருங்கல நிரைத்தனர் தந்திட் டின்றைக் கொண்டு மிவணி ராமினென் றொன்றிய காதலோ டுண்ணெகிழ்ந் துரைப்ப வத்தவ ரிறைவனொடு மொய்த்திறை கொண்டு பாடியுட் டமக்கிடம் பாற்படுத் தமைத்து வீட்டின தளவும் விறற்படை வீரமும் கூட்ட மன்னர் குறித்தவும் பிறவும் இருளும் பகலு மருவின ராராய்ந் தருந்திற லாள ரொருங்குயி ருண்ணும் கூற்றத் தன்ன வாற்றல ராகி மண்டில மறைந்த மயங்கிருள் யாமத் தெண்டிசை மருங்கினு மின்னுழி யெறிதுமென் றறியச் சூழ்ந்த குறியின ராகி நூலிற் பரந்த கோல வீதியுட் படைநகர் வரைப்பகம் பறைக்க ணெருக்கிப் பாடி காவல ரோடியாண் டெறிந்து புறக்காப் பமைத்துத் தலைக்காப் பிருக்கும் வல்வில் லிளையர்க் கெல்லை தோறும் காப்புநன் கிகழன்மின் கண்படை யுறந்தென் றியாப்புறக் கூறி யடங்கிய பொழுதிற் கலங்கத் தாக்கலின் மெலிந்த தாகி உடை

|