பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   308
Zoom In NormalZoom Out


 

யினு முடையா தாயினும் யாவரும்
அடையுந் தான மறியக் கூறி
நாற்பால் வகுத்து மேற்பா லமைத்துக்
காவலன் றன்னையுங் காவலு ணிறீஇப்
பொற்படைப் புரவி பொலிய வேறி
நற்படை நலியா நன்மையொடு பொலிந்த
சாலிகைக் கவயங் கோல மாகப்
புக்க மெய்யினர் பூந்தார் மார்பிற்
றாளாண் கடுந்திறல் விரிசிகன் வாழ்கென
மேலாண் மல்லன் பாடி காத்த
நீலக் கச்சை நிரைகழன் மறவரை
வேலிற் சாய்த்துங் கோல மான்றேர்
அடவி வாழ்கென வார்த்தன ருராஅய்த்
தடவரை மார்பிற் றளராச் செங்கோல்
மிலைச்சன் வாழ்கெனத் தலைக்காப் பிருந்த
தண்ட மள்ளரைத் தபுத்துயி ருண்டும்
கொண்ட வார்ப்பொடு கூட வெலிச்செவி
பண்டரும் பல்லியம் பாற்படத் துவைத்தும்
விறல்வே சாலி பாடி குறுகி
அடலருஞ் சீற்றத் தரசுபல கடந்த
விடலரும் பைந்தார் வேந்தருள் வேந்தன்
சங்கரன் வாழ்கெனத் தங்கல ரெறிந்தும்
வத்தவன் கொண்ட மாமுர சியக்கி
அயிலிற் புனைந்த வெயில்புரை யொள்வாள்
உரீஇய கைய ராகி யொரீஇக்
காவன் மறவரைக் கண்படை யகத்தே
வீழ நூறி வேழந் தொலைச்சி
மலையெனக் கவிழ மாமறித் திடாஅக்
கொலைவினைப் படைமாக் கொடியணி நெடுந்தேர்
வத்தவன் மறவர் மொய்த்தன ரெறியக்
கடுவளி யுற்ற கடலி னுராஅய்
அடலரும் பெரும்படை யார்ப்பொடு தொடங்கித்
தம்முட் டாக்கிக் கைம்மயக் கெய்தி
மதக்களி யானை வத்தவன் வாழ்கவென்
றுரைப்ப மற்றவ