சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   57
Zoom In NormalZoom Out

தும்பரே புரிந்து வைகினும்
கண்ணிய புலவரா லலர்தல் காண்டுமே.
 
235.மாலமர் நெடுங்கடன் மதலை மாசிலாக்
காலமைந் தொழுகுமேற் கரையுங் காணுமே
நூலவர் நுழைவொடு நுழைந்து செல்லுமேல்
வேலவ ரொழுக்கமும் வேலை காணுமே.
 
236.ஒன்றுநன் றெனவுணர் வொருவன் கொள்ளுமேல்
அன்றதன் றொருவனுக் கறிவு தோன்றுமால்
நின்றதொன் றுண்டுகேள் நீதி நூலினோ
டொன்றிநின் றவரொடு முணர்க வொட்டியே,
 
237.அந்தண ரொழுக்கமு மரைசர் வாழ்க்கையும்
மந்திர மில்லையேன் மலரு மாண்பில
இந்திர னிறைமையு மீரைஞ் ஞூற்றுவர்
தந்திரக் கிழவர்க டாங்கச் செல்லுமே.
 
238.என்றுதன் மனத்தினா னெண்ணி யீண்டுசீர்
நின்றநூற் கிழமையி னீதி மாக்களை
ஒன்றிநீர் தருகென வுழைக்குற் றேவலார்
சென்றவர்க் கருளிது வென்று செப்பினார்.
 
நான்காவது இரத நூபுரச் சருக்கம் முற்றும்

5.மந்திரசாலைச் சருக்கம்

  
239.செஞ்சினைத் தெரியலா னருளிச் செய்தது
தஞ்செவிக் கிசைத்தலுந் தணப்பில் கேள்வியார்
அஞ்சினர் நடுங்கி