| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 58 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| ன ராகி
யாயிடை நஞ்சிவர் வேலினான் பாத நண்ணினார். | |
| 240. | உள்ளுணின் றொலிபுறப் படாத
தொண்சிறைப் புள்ளுமல் லாதவும் புகாத நீரது வெள்ளிவெண் விளிம்பினால் விளங்கு வேதிகை வள்ளறன் மந்திரச் சாலை வண்ணமே. |
| 241. | ஆங்கமர்ந்
தமைச்சரோ டரைசர் கோமகன் பூங்கமழ் மண்டபம் பொலியப் புக்கபின் வீங்கொளி மணிக்குழை மிளிர்ந்து வில்லிட ஈங்கிவை மொழிந்தன னிறைவ னென்பவே. |
| 242. | மண்ணியல்
வளாகங் காக்கு மன்னரால் வணக்க லாகாப் புண்ணிய நீர ரேனும் புலவராற் புகலப் பட்ட நுண்ணிய நூலி னன்றி நுழைபொரு ளுணர்தல் செல்லாது எண்ணிய துணர்ந்து செய்யுஞ் சூழ்ச்சியு மில்லை யன்றே. |
| 243. | வால்வளை மறலி மேயும் வளர்திரை வளாக
மெல்லாம் கோல்வளை வுறாமற் காக்குங் கொற்றவ னெடிய னேனும் மேல்விளை பழியும் வெய்ய வினைகளும் விலக்க நின்றார் நூல்விளை புலவ ரன்றே நுணங்குபோ தணங்கு தாரீர். |
| 244. | சுற்றுநின் றெரியுஞ் செம்பொன் |