சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   59
Zoom In NormalZoom Out

மணிமுடி சுடரச் சூடி
வெற்றவெண் குடையி னீழல் வேந்தன்வீற் றிருக்கு மேனும்
மற்றவன் மனமுங் கண்ணும் வாழ்க்கையும் வலியுஞ் சால்பும்
அற்றமில் புகழு கோலு மாபவ ரமைச்ச ரன்றே.
 
245.வீங்குநீ ருலகங் காக்கும் விழுநுக மொருவ னாலே
தாங்கலாந் தகைமைத் தன்று தளையவிழ் தயங்கு தாரீச்சீர்
பாங்கலார் பணியச் சூழு நூல்வலார் பாக மாகப்
பூங்குலா மலங்கன் மாலைப் புரவலன் பொறுக்கு மன்றே.
 
246.அற்றமின் றுலகங் காக்கு மருந்தொழில் புரிந்து நின்றான்
கற்றவர் மொழிந்த வாறு கழிப்பது கடன தாகும்
மற்றவர்க் குறுதி நோக்கி வருபழி வழிகள் தூரச்
செற்றவர்ச் செகுக்குஞ் சூழ்ச்சி தெருண்டவர் கடவ தன்றே.
 
247.செறிந்தவர் தெளிந்த நூலாற் சிறந்தன தெளிந்து சொன்னால
அறிந்தவை யமர்ந்து செய்யு மமைதியா னரச னாவான்
செறிந்தவர் தெளிந்த நூலாற் சிறந்தன தெரிந்து கூறி
அறிந்தவை யாற்ற கிற்கு மமைதியா ரமைச்ச ராவார்.
 
248.வாள்வலித் தடக்கை