சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   62
Zoom In NormalZoom Out

256.இறையிவை மொழியக் கேட்டே யிருந்தவ ரிறைஞ்சி யேத்தி
அறைகழ லரவத் தானை யணிமுடி யரச ரேறே
நிறைபுக ழுலகங் காத்து நிலாகநின் னிறைமை யென்று
முறைமுறை மொழிய லுற்று முன்னிய முகத்த ரானார்.
 
257.பணிந்துமற் றேனை யார்பாங் கிருப்பநூல் பலவு நோக்கித்
துணிந்துதன் புலமை தோன்றச் சுச்சுதன் சொல்ல லுற்றான்
இணைந்துநின் றுலவுந் தும்பி யிடையிடை யிருண்டு தோன்ற
அணிந்துநின் றலரும் பைந்தா ரணிமணி முடியி னாற்கே.
 
258.பொழிற்கதிர் பரப்பி வந்து பொங்கிருள் புதைய நூறுந்
தொழிற்கதிர்க் கடவு டோன்றச் சூரிய காந்த மென்னும்
எழிற்கதிர்ப் பிறங்கல் வட்ட மெரியுமிழ்ந் திடுவ தன்றே
அழற்கதி ரிலங்குஞ் செவ்வே லதிர்கழ லரசர் கோவே.
 
259.கோணைநூற் றடங்க மாட்டாக் குணமிலார் குடர்க ணைய
ஆணைநூற் றடங்கக் காக்கு மரசர்த மருளி னாலே
பேணுநூற் புலவர் மாண்பும் பெருகுவ துருவத் தார்மேல்
பூணுநூற் பொலிந்து தோன்றும் பொன்வரை மார்ப
                                     வென்றான்
 
260.சூழ்கதிர்த் தொழுதி மாலைச் சுடர்ப்பிறைக் கடவு டோன்றித்
தாழ்கதிர் சொரிந்த போழ்திற் சந்தி