| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 63 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| ர காந்த
மென்னும் வீழ்கதிர் விளங்கு வட்டம் வெள்ளநீர் விரியு மன்றே போழ்கதிர் பொழிந்து பொங்கிப் புலானிணம் பொழியும் வேலோய். | |
| 261. | கண்ணளித்
துலக மெல்லாங் கவின்பெறக் காவல் பூண்டு தண்ணளித் தயங்குஞ் செங்கோற் றாரவர் தவத்தி னாலே மண்ணளித் தினிய நூலோர் மந்திர மலரு மென்றான் விண்ணளித் திலங்கும் வெள்ளி விரிந்தவெண் குடையி னாற்கே. |
| 262. | கண்ணியல்
கடாத்த வேழங் கவுளினா னுரிஞப் பட்டுத் தண்ணிய தன்மை நீங்காச் சந்தனச் சாதி போலப் புண்ணியக் கிழவர் கீழோர் பிழைத்தன பொறுப்ப வாயின் மண்ணியல் வளாக மெல்லாம் வழிநின்று வணங்கு மன்றே. |
| 263. | நிறந்தலை
மயங்க வெம்பி நெடுங்கடல் சுடுவ தாயின் இறந்தலை மயங்கு நீர்வா ழுயிர்க்கிட ரெல்லை யுண்டோ மறந்தலை மயங்கு செவ்வேன் மன்னவன் வெய்ய னாயி்ன் அறந்தலை மயங்கி வைய மரும்பட ருழக்கு மன்றே. |
| 264. | மண்குளிர் கொள்ளக் காக்கு மரபொழிந் தரசர்
தங்கள் விண்குளிர் கொள்ள வோங்கும் வெண்குடை வெதும்பு மாயிற் கண்குளிர் கொள்ளப் பூக்குங் |