| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 64 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| கடிகயத்
தடமுங் காவும் தண்குளிர் கொள்ளு மேனுந் தாமிக வெதும்பு மன்றே. | |
| 265. | தீயினப்
படர்ந்து வேந்தன் செறுவதே புரியு மாயிற் போயினம் படர்ந்து வாழும் புகலிட மின்மை யாலே வேயினம் படர்ந்த சாரல் வேங்கையை வெருவிப் புல்வாய் மாயினம் படர்வ தெல்லாம் வையகம் படரு மன்றே. |
| 266. | மறந்தலை
மயங்கி வையத் தொருவரை யொருவர் வாட்ட இறந்தலை யுறாமை நோக்கி யின்னுயிர் போலக் காக்கும் அறந்தலை நின்ற வேந்த ரடிநிழ லன்றி யார்க்கும் சிறந்ததொன் றில்லை கண்டாய் திருமணி திகழும் பூணோய். |
| 267. | ஒருமையாற் றுன்ப மெய்து மொருவனை யொருமை யாலே திருமையான் முயங்குஞ் செல்வச் செருக்கொடு திளைப்ப நோக்கி் இருமையு மொருமை யாலே யியற்றலி னிறைவன் போலப் பெருமையை யுடைய தெய்வம் பிறிதினி யில்லை யன்றே. |