| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 66 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| 272. | அந்தரந்
திரியுஞ் செய்கை யமரர்தம் மரசு வேண்டி இந்திர வுலகங் காணு நெறியவை யாவை யென்னின் மந்திரம் வழாத வாய்மை மாதவம் முயற லன்றேல் தந்திரந் தழுவிச் செங்கோ றளர்விலன் றரித்த லென்றான். |
| 273. | மரந்தலை
பிணங்கி வான்றோய் மணிவளர் வயிரக் குன்ற முரந்தனக் குயர வேந்தி யுய்த்திடு மொருவற் கேனும் அருந்தவ மரைச பார மவைபொறை யரிது கண்டாய் இரந்தவர்க் கீட்டப் பட்ட விருநிதிக் கிழவ வென்றான். |
| 274. | உரிதினி னொருவன் செய்த வூழ்வினை யுதயஞ்
செய்து விரிதலி னதன துண்மை விளங்கினாற் போல வேந்தர் கருதிய கருமச் சூழ்ச்சிப் பயத்தினாற் கருதும் வண்ணம் எரிதவழ்ந் திலங்கு வேலோ யெண்ணுவ தெண்ண மென்றான். |
| 275. | பஞ்சிநன்
றூட்டப் பட்ட மாதுளம் பருவ வித்து மஞ்சில்நின் றகன்ற சாகை மலரிடை வடிவு காட்டும் அஞ்சிநின் றனலும் |