| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 71 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| னென்னும் பொதியவிழ் பொலங்கொள் பைந்தார்ப் புரவலன் றிகிரி யெய்தி் மதிதவழ் குன்ற மெல்லாம் வணக்கிய பின்றை மண்ணும் கொதிதவழ் வேலி னான்றன் குறிப்பொடு கூடிற் றன்றே, | |
| 298. | சுற்றமாண் புடைமை யாலுஞ் சூழ்கதிர்க் திகிரி
யாளும். கொற்றமாங் குடைமை யாலுங் குலத்தது பெருமை யாலும் கற்றமாண் விஞ்சை யாலுங் கருதிய முடித்த லாலும் வெற்றிவே லவனோ டொப்பார் வேந்தர்மற் றில்லை வேந்தே. |
| 299. | தம்பியர்
நீலத் தேரோன் தயங்குதார் நீல கண்டன் வம்புயர் மகரப் பேழ்வாய் வயிரமா கண்டன் வண்டும் தும்பியுந் துவைக்குந் தொங்கற் சுகண்டனென் றிவர்கள் கண்டாய் வெம்பிய வுருமுத் தீயுங் கூற்றமும் வெதுப்பு நீரார். |
| 300. | படையின
தமைதி கூழின் பகுதியென் றிவற்றின் பன்மாண் புடையவ ரவனோ டொப்பா ரொருவர்மற் றில்லை வேந்தே விடையமொன் றின்றி வென்ற விரிசுட ராழி யாளும் நடையவ னுவப்பின் ஞாலம் பிறருழை நடப்ப தென்றான். |
| 301. | ஆணைநூ லமைச்ச னாவா னரிமஞ்சு வவன
தாற்றல் கோணைநூற் |