| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 76 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| ம் புரவி
வல்ல வரசிளங் குமர னென்றான். | |
| 320. | அளந்தறி
வரிய செய்கை யமிழ்தமா பதியை யாளும் வளந்தரு வயிரப் பைம்பூண் மன்னவன் சிறுவன் வண்டார் விளங்கொளி யுருவத் திண்டோள் வேகமா ரதனை யன்றே இளங்களி யுழுவை யாக விருநிலம் புகழ்வ தென்றான். |
| 321. | வேழத்தாற்
பொலிந்த சோலை மேகமா புரம தாளும் ஆழித்தே ரரவத் தானை யரசர்கோன் புதல்வ னந்தார்ப் பாழித்தோ ளுருவச் செங்கட் பதுமத்தேர்ப் பெயரி னானை ஊழித்தீ யென்று வேந்த ருட்குவ துருவத் தாரோய். |
| 322. | இலங்கொளி
மாட வீதி யிரத்தின புரம தாளும் உலங்கெழு வயிரத் திண்டோ ளொளிமுடி யரசன் செம்மல் அலங்கலம் புரவித் தானை யருங்கலத் தேரின் பேரான் குலங்கெழு குரிசில் கண்டாய் கொண்டல்வா னுருமொ டொப்பான். |
| 323. | நங்கண்மால்
வரையின் மேலோ னன்னகர் கீத மென்னும் திங்கண்மால் புரிசை வேலிச் செழுநக ரரசன் செம்மல் அங்கண்மா ஞால மாளு மரிகண்ட னவனை விண்மேல் செங்கண்மால் முனியு மேனுஞ் செய்வதொன் றில்லை கண்டாய். |