| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 77 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| 324. | சேந்தெரி
செம்பொன் வீதித் திரிபுர மதனை யாளும் வாய்ந்தெரி வயிரப் பைம்பூண் மன்னவன் புதல்வன் மல்லா டேந்துதோ ளரசர் போரே றவனளி தாங்க னென்பான் காய்ந்தெரி கனலின் வெய்யோன் கல்வியாற் கடலோ டொப்பான். |
| 325. | செந்தளிர்
புதைந்த சோலைச் சித்திர கூட மாளும் அந்தளி ரலங்கன் மாலை யரசர்கோன் சிறுவ னந்தார் இந்திரன் புதல்வ னன்னா னேந்தலே மாங்க தற்கிம் மந்திர வுலகின் வாழு மன்னர்மா றில்லை மன்னா. |
| 326. | அருமணி யடுத்த வீதி யச்சுவ புரம
தாளும் திருமணி திகழும் பூணான் பெருமகன் சிறைவண் டென்னும் கருமணி துதைந்த பைந்தார்க் கனகசித் திரனை யன்றே ஒருமணி திலக மாக வுடையது நிலம தென்றான். |
| 327. | சீரணி
முழவ மோவாச் சிரீநிலை யதனை யாளும் காரணி தடக்கை வேந்தன் கான்முளை கனபொன் னார்ந்த தேரணி யரவத் தானைச் சித்திரத் தேரின் பேரான் தாரணி மார்ப னன்றே தரணிக்கோர் திலக மாவான். |
| 328. | கற்றவர் புகழுஞ்
சீர்த்திக் கனகபல் லவத்தை யாளும் கொற்றவன் சிறு |