| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 78 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| வன் கோலக் குங்குமக் குவவுத்
தோளான் செற்றவர்ச் செகுக்குஞ் செய்கைச் செருவல்லான் சிங்க கேது மற்றவன் பிறந்த பின்னா மண்மகள் மகிழ்ந்த தென்றான், | |
| 329. | இஞ்சிசூ
ழெரிபொன் மாடத் திந்திரன் மிசைந்த நாமச் சஞ்சய முடைய கோமான் றாண்முளை தரணி யெல்லாம் அஞ்சுநீ ரலங்கல் வேலா னருஞ்சய னவனை நங்கண் மஞ்சுசூழ் மலைக்கோர் சூளா மணியெனக் கருது மன்னா!. |
| 330. | ஈங்கிவர்
தம்முள் யாவ ரிலங்கிடும் பவழச் செவ்வாய்க் கோங்கிவர் குவிமென் கொங்கைக் கொம்பினுக் குரிய காளை ஆங்கவன் றன்னை யாராய்ந் தறிந்தருள் செய்க வென்றான் வாங்கிரும் பரவை முந்நீர் மணிகொழித் தனைய சொல்லான். |
| 331. | மன்னர்
நீண்முடி மென்மணித் தொத்தொளி துன்னு சேவடி யாற்குச் சுருங்கவே பன்னு கேள்விப் பவச்சுதன் சொல்லலும் அன்ன தேயென் றவர்களு மொட்டினார். |
| 332. | அல்லி
நாண்மலர்த் தாருமுத் தாரமும் வல்லி யாங்கணி சாந்தும் வனைந்துராய் மல்லி னான்மலி மார்பற்கு மற்றிவை சொல்லி னான்சுத சாகர னென்பவே. |
| 333. | ஆழி யாள்கின்ற
வச்சுவ கண்டன்மேல் பாழி யாகின்ற திண்டோட் பவச்சுதன் சூழி யானையி னாய்சொலப் பட்டன ஊழி யாருரை யொத்துள கண்டாய். |
| 334. | ஆயி
னுஞ்சிறி துண்டணி வண்டினம் பாயி னும்பனி |