| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 81 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| குறிப்பறிந்
திவைக ளெல்லாம் அங்கவன் மொழிந்த பின்னை யவனையு மமைதி கூறி நங்கைதன் றாதை தோழர் நால்வரு ணால்வ ராவான் தொங்கலந் துணர்கொள் மார்பிற் சுமந்திரி சொல்ல லுற்றான். | |
| 348. | அண்ணலங் களிகொள் யானை
யச்சுவ கண்டன் மூத்தாற் கெண்ணலுந் தகுவ தன்றா லிவன்பணி யிகத்த லாற்றாக் கண்ணலங் கவரும் வேலோர்க் கீவதுங் கரும மன்றால் பெண்ணலங் கனிந்த பேதை யிருப்பதும் பெருமை யன்றே. |
| 349. | சூழ்கதிர்ப் புரிசை வேலிச் சுரேந்திர காந்த
மாளும் தாழ்கதி ரார மார்பிற் றமனியக் குழையி னான்றன் போழ்கதிர்க் கடவுள் போலும் புதல்வனுக் குரிமை செய்வ தாழ்கதிர் விலங்க லாளு மரசவஃ தரிது கண்டாய். |
| 350. | மங்கையர்
முகத்தி னீண்டு மைகடை மதர்ப்ப மாந்தி அங்கயல் பிறழ்வ போலு மையரி யடர்த்த வாட்கண் பங்கயச் செங்க ணான்மேற் படைத்தொழில் பயின்ற போழ்தும் தங்கிய மனத்த னாகித் தளர்விலன் றவத்தின் மிக்கான். |
| 351. | மண்கணை
முழவ மேங்க மடந்தையர் நுடங்கு மாறும் பண்கனிந் தினிய பாடற் பாணியும் பயின்று மேவான் விண்கனிந் தனைய வின்ப வெள்ளமும் வெறுத்து |