| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 85 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| ள்ளிலை யுரிஞ்சு
மோடைமா வெண்டிரண் மணிபுடை சிலம்ப விட்டன வண்டிரள் கிளையொடு வளைக ளார்த்தவே. | |
| 365. | ஒலிவிழா
வண்டின மூத வூறுதேன் மலிவிழாப் பிணையலு மணங்கொள் சாந்தமும் பலிவிழாப் பதாகையும் பரந்து பாடுவார் கலிவிழாக் கழுமின கடவுட் டானமே. |
| 366. | குண்டுநீர்க்
குழுமலர்க் குவளைப் பட்டமும் மண்டுநீர் மரகத மணிக்கல் வாவியுங் கொண்டுநீ ரிளையவர் குடையக் கொங்கொடு வண்டுநீர்த் திவலையின் மயங்கி வீழ்ந்தவே. |
| 367. | பங்கயத் துகள்படு பழன
நீர்த்திரை மங்கையர் முலையொடு பொருத வாவிகள் அங்கவ ரரிசன மழித்த சேற்றினும் குங்குமக் குழம்பினுங் குழம்பு கொண்டவே. |
| 368. | அங்கள்வாய்க்
கயம்வள ராம்ப றூம்பிடைப் பொங்குகா டேர்பட ஞெறித்துப் பூவொடு கொங்கைவாய்க் குழலவர் குளிப்ப விட்டன திங்கள்வாண் முகவொளி திளைப்ப விண்டவே. |
| 369. | மாயிரும்
பனித்தடம் படிந்து மையழி சேயரி நெடுமலர்க் கண்கள் சேந்தெனத் தாயரை மறைக்கிய குவளைத் தாது |