| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 86 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| தேன் பாயமோந் திறைஞ்சினார் பாவை மார்களே. | |
| 370. | சந்தனத்
துளித்தலை ததும்பச் சாந்தளைந் தந்தரத் தசைப்பன வால வட்டமும் எந்திரத் திவலையு மியற்றி யீர்மணல் பந்தருட் பாலிகைக் குவளை பாய்த்தினார். |
| 371. | குருமணித்
தாமரைக் கொட்டை சூடிய திருமணிப் பீடமுஞ் செதுக்க மாயவும் பருமணிப் பளிங்கென விளங்கு வான்பலி அருமணிக் கொம்பனா ரலர வூட்டினார். |
| 372. | அன்னணம்
பொழுதுகண் ணகற்ற வாயிடைப் பன்னருங் காலநூல் பயின்ற பண்புடைக் கன்னலங் கருவியோர் கழிந்த நாழிகை மன்னவ னடிமுத லுணர்த்தி வாழ்த்தினார். |
| 373. | வாரணி
முலையவர் பரவ மன்னவன் ஈரணிப் பள்ளிபுக் கருளி னானிரந் தேரணி யின்னிய மிசைத்த வின்பமோ டாரணி தெரியலா னமிழ்த மேயினான். |
| 374. | வெள்ளிழை பொலிந்தொளி துளும்பு மேனியன் |