சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   87
Zoom In NormalZoom Out

வள்ளிதழ் மல்லிகை மலர்ந்த மாலையன்
அள்ளிதழ்ப் புதுமல ரடுத்த வீதிமேல்
கள்ளிதழ்க் கண்ணியான் காலி னேகினான்.
 
375.பொன்னவிர் மணிக்கழல் புலம்பத் தேனினம்
துன்னலர் தொடையலிற் சுரும்பொ டார்த்தெழ
மன்னவ னடத்தொறு மகர குண்டலம்
மின்மலர்ந் திலங்குவில் விலங்க விட்டவே.
 
376.நெய்யிலங் கெஃகினர் நிறைந்த விஞ்சையர்
கையிலங் கீட்டியர் கழித்த வாளினர்
மெய்யிலங் குறையினர் விசித்த கச்சையர்
வையகங் காவலன் மருங்கு சுற்றினார்.
 
377.சுரும்புசூழ் பிணையலுஞ் சுண்ண மாரியும்
கரும்புசூழ் கிளவியர் சொரிந்து கைதொழ
நிரம்புநூ னிமித்திகன் மாட நீள்கடை
அரும்புசூழ் தெரியலா னருளி னெய்தினான்.
 
378.எங்குலம் விளங்கவிங் கருளி வந்தவெங்
கொங்கலர் தெரியலாய் கொற்றங் கொள்கென