| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 93 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| 401. | மன்னவ
நின்மகன் மரிசி மாற்றிடைப் பொன்னவிர் போதன முடைய பூங்கழல் கொன்னவில் வேலவன் குலத்துட் டோன்றினால் அன்னவன் கேசவர்க் காதி யாகுமே. |
| 402. | கேசவ
னார்திறங் கிளப்பின் வெண்மலை காசறு வனப்பினோர் கன்னி யேதுவா ஆசற வச்சுவக் கிரீவ னாவியும் தேசறு திகிரியுஞ் செல்வன் வௌவுமே. |
| 403. | தேரணி
கடற்படைத் திவிட்டன் சென்றுபின் ஆரணி யறக்கதி ராழி நாதனாம் பாரணி பெரும்புகழ்ப் பரத வென்றனன் சீரணி திருமொழித் தெய்வத் தேவனே. |
| 404. | ஆதியு
மந்தமு நடுவு நம்மதே ஓதநீ ருலகுடை யுரிமை யென்றரோ காதுவே லரசர்கோக் களிப்புற் றானிது போதுசே ரலங்கலாய் புராண நீர்மையே. |
| 405. | அன்னணம்
புராணநூ லகத்துத் தோன்றிய கன்னவி லிலங்குதோட் காளை யானவன் மின்னவிர் விசும்பினின் றிழிந்து வீங்குநீர் மன்னிய வரைப்பக மலிரத் தோன்றினான். |
| 406. | திருவமை சுரமைநா
டணிந்து செம்பொனால் பொருவரு போதன முடைய பூங்கழல் செருவமர் தோளினான் சிறுவ ராகிய இருவரு ளிளையவ னீண்டந் நம்பியே. |