| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 94 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| 407. | மீனுடை
விரிதிரை வையங் காக்கிய மானுட வுடம்பினான் மறைந்து வந்தவத் தேனுடை யலங்கலான் றெய்வ மார்பகம் தானடைந் தமர்வதற் குரிய டையலே., |
| 408. | ஆங்கவற்
கீந்தபி னாழி தாங்கிய ஈங்கவற் கொன்றுனக் கிரண்டு சேடியும் தாங்கிய திருவினாற் றருமற் றென்றலும் வீங்கிய வுவகையன் வேந்த னாயினான். |
| 409. | கொங்கலர்
தெரியலான் றிறத்திற் கொள்குறி இங்கியா னிசைத்ததே யமையு மல்லதோர் திங்கணா ளகவையிற் றிவிட்ட னாங்கொரு சிங்கம்வாய் பிளந்திடுந் தெளியீ தென்னவே. |
| 410. | நிமித்திக
னுரைத்தலு நிறைந்த சோதியான் உமைத்தகை யிலாததோ ருவகை யாழ்ந்துகண் இமைத்தில னெத்துணைப் பொழுது மீர்ம்மலர்ச் சுமைத்தகை நெடுமுடி சுடரத் தூக்கினான். |
| 411. | இருநிலத் தலைமக
னியன்ற நூற்கடல் திருநிதிச் செல்வனைச் செம்பொன் மாரியாச் சொரிநிதிப் புனலுடைச் சோதி மாலையென் றருநிதி வளங்கொணா டாள நல் |