சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   97
Zoom In NormalZoom Out

பெறுவதோர் பெருமை யில்லையே.
 
422.பிடிகளை மகிழ்களிற் றரசர் பெய்ம்மலர்
முடிகளின் மணிபொர முரலு மொய்கழல்
அடிகள தருளினா லம்மென் சாயலிக்
கடிகமழ் குழலினாள் கவினு மெய்தினாள்.
 
423.திருமனைக் கிழத்திதன் றேங்கொள் சின்மொழி
மருமணி முடியினான் மகிழ்ந்து மற்றவள்
பருமணிப் பூண்முலை பாய மார்பிடை
அருமணித் தெரியறே னழிய வைகினான்.
 
424.மற்றைநாண் மகனையு மமைச்சர் தம்மையும்
கொற்றவாட் டடக்கையான் கூவிக் கொண்டிருந்
திற்றியான் கருதிய தென்று தொல்லைநூல்
கற்றகா வலனது கதையுஞ் சொல்லினான்.
 
425.வீங்கிய முலையவ டிருவும் வெம்முலைக்
கோங்கிய முகிலவ னுரிய பெற்றியுந்
தாங்கிய புகழவன் மொழியத் தாரவர்
வீங்கிய வுவகையர் வியந்து சொல்லினார்.
 
426.தெய்வமே திரிகுழற் சிறுமி யாவதற்
கையமே யொழிந்தன மனலும் வேலினாய்
செய்வதே லிதுனித் திவிட்டன் றாதையாவ்
வெய்யவே லவனுழை விடுத்தும் வேந்தனே.