சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   99
Zoom In NormalZoom Out

6.தூதுவிடு சருக்கம் 

மருசி தங்கிய சோலையின் இயல்பு
 

431.மருவினியன மதுவிரிவன மலரணிவன வகுளம்
திருமருவிய செழுநிழலன செங்குழையன தேமா
வரிமருவிய மதுகரமுண மணம்விரிவன நாகம்
பொரிவிரிவன புதுமலரன புன்குதிர்வன புறனே.
 
432.நிழனகுவன நிமிர்தழையன நிறைகுளிர்வன சாந்தம்
எழினகுவன விளமலரன வெழுசண்பக நிகரம்
குழனகுவன மதுகரநிரை குடைவனபல குரவம்
அழனகுவன வலர்நெரிதர வசைநிலையவ சோகம்.
 
433.எழுதுருவின வெழுதளிரன விணரணிவன விரதம்
இழுதுருவின கொழுமலரிடை யெழில்பொலிவன மதுகம்
கழுதுருவின கஞலிலையன கழிமடலின கைதை
பொழுதுருவின வணிபொழிலின பொழிதளிரன புன்னை.
 
434.வளர்கொடியன மணம்விரிவன மல்லிகையொடு மௌவல்
நளிர்கொடியன நறுவிரையக நறுமலரன நறவம்
குளிர்கொடியன குழைமாதவி குவிமுகையன கொகுடி
ஒளிர்கொடியன வுயர்திரளினொ டொழுகிணரன வோடை.
 
435.குடைய