சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   102
Zoom In NormalZoom Out

யற்றிய நிலாநிழன்ம ணிக்கன்
மனக்கினிதி னேறினை மகிழ்ந்திருமி னென்றான்.
 
442.அழற்கதிரி யங்கறவ லங்கிண ரசோக
நிழற்கதிர்ம ரத்தகைய தாகநினை கில்லேன்
பொழிற்கடவுள் பொன்னிடமி தென்னைபுகு மாறென்
றெழிற்கதிர்வி சும்பிடையி ழிந்திவன்மொ ழிந்தான்.
 
443.நிலாவளர் நிழற்கதிர் நிமிர்ந்தொளி துளும்பும்
சிலாதல மிதற்குரிய தெய்வமெனல் வேண்டா
அலாதவ ரிதற்குரிய ரல்லரவ ராவிர்
உலாவிய கழற்றகையி னீரெனவு ரைத்தான்.
 
444.என்னவிது வந்தவகை யென்னினிது கேண்மின்
நன்னகரி தற்கிறைவன் முன்னநனி நண்ணித்
தன்னிகரி கந்தவ னங்கத னெனும்பேர்ப்
பொன்னவிரு லாநூற்பு ரோகித னுரைத்தான்.
 
445.மின்னவிர் விளங்குசுடர் விஞ்சையுல காளும்
வின்னவி றடக்கைவிறல் வேலொருவன் வேண்டி
மன்னநி