சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   112
Zoom In NormalZoom Out

484.அலத்தகக் குழம்புதம் மடித்தலத்தொர் பாகமா
நிலத்தலத்தொர் பாகமாக நீடுவாயில் கூடுவார்
கலத்தலைத் தொகுத்தகோவை கண்ணெகிழ்ந்து சிந்தலால்
மலைத்தலைத்த ழற்சிதர்ந்த போன்றமாட வாயெலாம்.
 
485.பாடகந் துளங்கவும் பசும்பொனோலை மின்னவும்
சூடகந் துளும்பவுஞ் சுரும்புசூழ்ந்து பாடவும்
ஊடகங் கசிந்தொசிந்து நின்றுசென்று வந்துலாய்
நாடகங்க ணன்னகர்க்க ணங்கைமார் நவிற்றினார்.
 
486.மாலையால்வி ளங்கியும்பொன் வாசச்சுண்ணம் வீசியும்
சாலவாயி லாறுசந்த னக்குழம்பு சிந்தியும்
நீலவா ணெடுங்கணார் நிரந்துநெஞ்சு தாழொரீஇ
ஞாலமாளு நம்பிமாரின் மாலுமாகி நண்ணினார்.
 
487.வேய்மறிந்த தோள்விளர்த்து வெவ்வுயிர்ப் பொடுள்விராய்த்
தோமறிந்த சூழ்துகின் னெகிழ்ந்துடுத்து வீழ்ந்தசைஇப்
பூமறிந்த தேங்குழன் முடித்தெடுத்து வீழ்த்துலாய்த்
தாமறிந்த முல்லைவாய தாதுகுத்து டங்கினார்.
 
488.கொங்குவார் மலர்த்தடத் தமர்ந்தகோதை மாதரோ
டங்கராகம் வீற்றிருந்த ணிந்தவார மொய்குழல்
மங்கைமார்கள் கண்ணும்வண்டு மாலை