சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   113
Zoom In NormalZoom Out

யு மனங்களும்
தங்குமார்பி னம்பிமார்க டானைசோலை சார்ந்ததே.
 
489.மானளாய நோக்கினார் மனங்கலந்து பின்செல
வானளாய சோலைவாயின் மன்னவீரர் துன்னலும்
கானளாய போதணிந்து காவிவிம்மு கள்ளளைஇத்
தேனளாவு வண்டுகொண்டு தென்றல்சென் றெழுந்ததே.
 
490.செம்முகப் பசும்பொனோடை வெண்மருப்பி ணைக்கரும்
வெம்முகத்து வீழ்கடாத்து வேழநின் றிழிந்தபின்
கைம்முகத்து வேலிலங்கு காமர்தாங்கொ லென்றுசென்
றம்முகத்த தும்பிவண்டு தேனொடாடி யார்த்தவே.
 
491.தாதுநின்ற தேறனீர் தளித்திவற்றின் மேலளி
கோதுநின்ற போதுகொண்டு சிந்திநம்பி மார்களை
மாதுநின்ற மாதவிக் கொடிகடந் தளிர்க்கையால்
போதுகென்றி டங்கள்காட்டு கின்றபோற் பொலிந்தவே.
 
492.போதுலாய வேரிமாரி சாரலாய்ப் பொழிந்துதேன்
கோதலா னெரிந்ததாது கால்குடைந்து கொண்டுறீஇ
மாதுலாய வண்டிரைத்து மங்குல்கொண்டு கண்மறைத்
தேதிலார்க்கி யங்கலாவ தன்றுசோலை வண்ணமே.
 
493.போதுலாய பூம்பொதும்பர் மேலதென்றல் வீசலால்
தாதுலாய போதணிந்து தாழ்ந்துதாம வார்குழல்
மாதரார்கள் போலவல்லி மார்புபுல்லி மைந்தரைக்
காதலால் வளைப்பபோன்று காவினுட் கலந்தவே.
 
494.புல்லிவண் டமர்ந்துதங்கு பூந்தழைப் பொதும்பிடை
மல்லிகைக் கொடிக்கலந்து மௌவல்சூட வௌவுநீர்