சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   115
Zoom In NormalZoom Out

ணிகாறு முண்மகிழ்ந்து கண்டுகண்
மால்கொள்சிந்தை யார்கள்போல மற்றுமற்று நோக்கினான்.
 
499.வேரிமாலை விம்மவும் விளங்குபூண்டு ளும்பவுந்
தாரொடார மின்னவுந் தயங்குசோதி கண்கொள
ஆரநோக்க கில்லனன்ன னரசநம்பி மார்களைச்
சாரவாங்கொர் கற்றலத் திருந்துதான் விளம்பினான்.
 
500.செம்பொன்வா னகட்டிழிந்து தெய்வயானை யுண்மறைஇ
வம்புநீர் வரைப்பகம் வணக்கவந்த மாண்புடை
நம்பிமீர்க ணுங்கள்பாத நண்ணிநின் றிறைஞ்சுவார்
அம்பொன்மாலை மார்பினீ ரருந்தவஞ்செய் தார்களே.
 
501.திங்கள்வெண் கதிர்ச்சுடர்த்த திலகவட்ட மென்றிரண்
டிங்கண்மா லுயிர்க்கெலா மெளிய்யவென்று தோன்றலும்
தங்கள்சோதி சாரலாவ வல்லவன்ன நீரவால்
எங்கண்முன்னை நுங்கடன்மை யென்றுபின்னை யேத்தினான்.
 
502.இமைகள்விட்ட நோக்கமேற வின்னபோல்வ சொல்லலும்
அமைகமாற்றம் நும்மையெங்க ளடிகள்காண வேகுவாம்
சுமைகொள்மாலை தொடுகளிற்றெ ருத்தமேறு கென்றனர்
சிமைகொடேவர் போலநின்று திகழுகின்ற சோதியார்.
 
மூவரும் யானைகளின் மேல் ஏறுதல்
 
503.அம்பொன்மாலை கண்கவர்ந் தலர்ந்தசெல்வ வெள்ளமேய்
வெம்புமால்க ளிற்றெருத்தம் விஞ்