சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   116
Zoom In NormalZoom Out

சையாளன் மேற்கொளப்
பைம்பொன்மாலை வார்மதப் பரூஉக்கையீரு வாக்கண்மீச்
செம்பொன்மாலை மார்பர்சேர்ந்து தேவரிற்று ளும்பினார்.
 
504.கதிர்நகைக் கபாட வாயிற் கதலிகைக் கனக நெற்றி
மதிநக வுரிஞ்சு கோட்டு மாளிகை நிரைத்த வீதிப்
புதுநக ரிழைத்து முத்துப் பொலங்கலத் தொகையும் பூவும்
எதிர்நகைத் துகைத்து மாதரெதிர்கொள நகரஞ் சேர்ந்தார்.
 
505.விரைக்கதி ரலங்கற் செங்கேழ் விண்ணியங் கொருவ
                                       னோடும்
வரைக்கெதிர்ந் திலங்கு மார்பின் மன்னவ குமரச் செல்வர்
எரிகதி ரேற்றைக் கால மெழுநிலாப் பருவ மேகம்
நிரைத்தெழு மிருது மன்று நிரந்ததோர் சவியரானார்.
 
506.வார்கலந் திலங்கு கொம்மை வனமுலை மகளிரிட்ட
வேர்கலந் தெழுந்த தூம வியன்புகை கழுமி நான
நீர்கலந் துகுத்த மாலை நிறமதுத் திவலை சிந்தக்
கார்கலந் திருண்டபோலுங் கண்ணகன் தெருவுட் சென்றார்.
 
507.தெளிர்முத்த மணலுஞ் செம்பொற் சுண்ணமுஞ் சிதர்ந்து
                                         தீந்தேன்
தளிர்முத்த மலரும் போதும் சாந்தமு முழக்கி வண்டார்
ஒளிர்முத்த முறுவலார்த முழைக்கலங் கலந்து மாலைக்
குளிர்முத்த நிழற்றுங் கோயிற் பெருங்