சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   118
Zoom In NormalZoom Out

மில் வயங்குகேள்வி மதிவரன் வாங்கிக் கொண்டான்.
 
513.நிகரிகந் தழகி தாகி நெரிவடுப் படாத வேழப்
புகர்முகப் பொறிய தாய புகழ்ந்தசொல் லகத்துப்போகா
மகரவாய் மணிக்கட் செப்பின் மசிகலந் தெழுதப் பட்ட
பகரரும் பதங்கள் நோக்கிப் பயின்றுபின் வாசிக் கின்றான்.
 
514.போதனத் திறைவன் காண்க விரதநூ புரத்தை யாளும்
காதுவேன் மன்ன னோலை கழலவன் றனக்கு நாளும்
ஆதிய வடிசி லொண்கே ழஞ்சன முள்ளிட் டெல்லாம்
தீதுதீர் காப்புப் பெற்றுச் செல்கென விடுத்த தன்றே.
 
515.அல்லதூஉங் கரும மாவ தலங்குதா ரிவுளித் திண்டேர்
வல்லவ னிளைய நம்பிக் குரியளா வழங்கப் பட்டாள்
மல்லக மார்பி னான்றன் மருமக ளிவளைக் கூவி
வல்லிதிற் கொடுக்க மன்னன் வாழ்கதன் கண்ணி மாதோ.
 
516.என்றவ னோலை வாசித் திருந்தன னிறைவன் கேட்டு
வென்றியம்பெருமைவிச்சா தரரென்பா ரெம்மின் மிக்கார்
இன்றிவன் விடுத்த திவ்வா றென்கொலோ வென்று சிந்தித்
தொன்றுமற் றுரைக்க மாட்டா திருந்தன னுரங்கொ
                                     டோளான்.