சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   123
Zoom In NormalZoom Out

வி னூக்கி யுரைக்கிய வெடுத்துக் கூறும்.
 
531.மஞ்சிவர் மணங்கொள் சோலை மணிவரைச் சென்னி வாழும்
விஞ்சையர் விச்சை யாலே விழுமிய ரென்ப தல்லால்
அஞ்சலில் தானை வேந்தே மனிதரே யவரும் யாதும்
வெஞ்சுடர் விளங்கு வேலோய் வேற்றுமை யின்மை
                                      கேண்மோ.
 
532.மண்ணவின் முழவின் மாநீர்ப் பவபுர முடைய மன்னன்
பண்ணவில் களிநல் யானைப் பவனவே கற்குத் தேவி
கண்ணவில் வடிவிற் காந்தி மதியவள் காதற் பாவை
வண்ணவிற் புருவ வாட்கண் வாயுமா வேகை யென்பாள்.
 
533.மற்றவ ளோடும் வந்தேன் மன்னயான் மருசி யென்பேன்
அற்றமில் கேள்வி யெந்தை யஞ்சுமா னென்னும் பேரான்
பெற்றதா யருசி மாலை பெருமக ளருளி னால்யான்
கற்றநூல் பல்ல வாகுங் கருமணிக் கடகக் கையாய்.
 
534.அலகைசா லாதி காலத் தரசர்கள் தொடர்ச்சி யெல்லாம்
உலகநூல் பலவு மோதி யுணர்ந்தன னுரைப்பக் கேண்மோ
விலகிய கதிர வாகி விடுசுடர்