சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   124
Zoom In NormalZoom Out

வயிரக் கோலத்
திலகம்வீற் றிருந்த கண்ணித் திருமுடிச் செல்வ வென்றான்.
 
 
535.ஆதிநா ளரசர் தங்க ளருங்குல மைந்து மாக்கி
ஓதநீ ருலகின் மிக்க வொழுக்கமுந் தொழிலுந் தோற்றித்
தீதுதீர்ந் துயர்ந்த பெம்மான் திருவடி சாரச் சென்று
நீதிநூற் றுலகம் காத்து நிலந்திரு மலர நின்றான்.
 
536.மூசிநாட் சுரும்பு பாய முருகுடைந் துருக்குஞ் சோலைக்
காசிநாட் டரசன் செங்கோற் கதிர்முடிக் கச்ச னென்பான்
மாசினாற் கடலந் தானை மன்னமற் றவற்குத் தேவி
தூசினாற் றுளும்பு மல்குல் சுதஞ்சனை சுடரும் பூணாய்.
 
537.வேய்ந்தக நிழற்றுங் கோதை மிளிர்மணிக் கலாப வட்டம்
போந்தகந் திகழ்ந்து மின்னுப் பூந்துகில் பொலிந்த வல்குல்
ஆய்ந்தகங் கமழுங் கோதை யவள்பெற்ற வரச சிங்க
நாந்தகக் கிழவர் கோவே நமியென்பாள் நலத்தின் மிக்கான்.
 
538.அங்கவ னரசு வேண்டா னறக்கடல் படைத்த நாதன்
பங்கயங் கமழும் மேனி பவித்திர பரம யோகி
தங்கிய தியானப் போழ்திற் றாழ்ந்துதன் றடக்கை கூப்பிப்
பொங்கிய காதல் கூரப் பாடின