| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 125 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| ன் புலமை மிக்கான். | |
| 539. | அலகிலா
ஞானத் தகத்தடங் கநுங்கி உலகெலாம் நின்னு ளொளித்தாயு நீயே ஒளித்தாயு நீயே யுயிர்க்கெலாங் கண்ணாய் அளித்தாயுங் காத்தாயு நீயேவாழி யறவேந்தே. |
| 540. | அழனாறும்
வெங்கதிரோ னாண வலராது நிழனாறு மூர்த்தியாய் நின்றாயு நீயே நின்றாயு நீயே நிறைபொரு ளெல்லைக்கட் சென்றாயும் வென்றாயு நீயேவாழி திருமாலே. |
| 541. | நிறைதரு
கேவலத்தோய் நின்னடியார்க் கெல்லாங் குறைதலி லின்பங் கொடுப்பாயு நீயே கொடுப்பாயு நீயேயெங் குற்றேவல் வேண்டாய் விடுத்தாயு நீத்தாயு நீயேவென்ற பெருமானே. |
| 542. | என்றவன்
பாடக் கேட்டே யிறைஞ்சின குறிஞ்சி யேகா நின்றன விலங்கு சாதி நிலங்கொண்ட பறவை யெல்லாம் அன்றுமெய் மறந்து சோர்ந்தார் கின்னர ரமரர் தாழ்ந்தார் வென்றவன் றியானத் துள்ளான் வியந்திலன் சிறிதும் வேந்தே. |
| 543. | மணநிரைத்
திலங்குந் தாரோய் மற்றவ னுலோக நாதன் குணநிரைத் திசைத்த கீதங் கேட்டலு மணிகொள் கோவைக் கணநிரைத் திலங்குங் காய்பொன் முடிமிசை யீரைஞ் ஞூறு பணநிரைத் திலங்கப் புக்கான் பணதர ரரச னன்றே. |
| 544. | பன்னக ருலகங் காக்கும் பாய்கதிர்ப் பசும்பொன்
மேனி மின்னவிர் வயிரச் சூட்டு விடுசுடர் மணிப்பொற் பூணான் தன்னிக ரிகந்த தோன்றல் சரணெனப் பரமன் பாதம் மன்னர்கட் கரசன் |