சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   127
Zoom In NormalZoom Out

த்தின் கீழ்த்தன்
அச்சமி லுலகஞ் சேர்ந்தா னாயிரம் பணத்தி னானே.
 
549.ஆங்கவன் குலத்தி னானெம் மதிபதி யவனோ டொப்பா
ஓங்கிய குலமுஞ் செல்வப் பெருமையு முடையை நீயும்
ஈங்கிரு குலத்து ளீர்க்குங் கருமம்வந் திசைத்த போழ்தி
னீங்கரு நறுநெய் தீம்பாற் சொரிந்த தோர் நீர்மைத்
                                       தென்றான்.
550.தங்குலத் தொடர்ச்சி கூறித் தானவ னிருந்த போழ்தின்
நுங்குல நிலைமை யெல்லா நூலினீ யுரைத்த வாறே
எங்குல நிலைமை யானு முரைப்பனென் றெடுத்துக் கொண்டு
பொங்கலர்ப் பிணைய லான்றன் புரோகிதன் புகல லுற்றான்.
 
551.யாவனாற் படைக்கப் பட்ட துலகெலாம் யாவன் பாத்த
தேவனால் வணக்கப் பட்ட தியாவன தகலஞ் சேர்ந்து
பூவினாள் பொறியொன் றானாள் புண்ணிய வுலகங் காண
ஏவினான் யாவ னம்மை யாவன துலக மெல்லாம்.
 
552.மற்றவ னருளின் வந்தான் மரகத மணிக்குன் றொப்பச்
சுற்றிநின் றிலங்குஞ் சோதித் தோள்வலி யென்னும் பேரக்
கொற்றவ னுலகங் காத்த கோ