சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   128
Zoom In NormalZoom Out

ன்முறை கொண்டு கண்டாய்
கற்றவ ரின்று காறுங் காவனூல் கற்ப தெல்லாம்.
 
553.கொடிவரைந் தெழுதப்பட்ட குங்குமக் குவவுத் தோளான்
இடிமுர சதிருந் தானை யிறைத்தொழின் மகனுக் கீந்து
கடிமண மனுக்குந் தெய்வக் கழலடி யரசர் தங்கள்
முடிபொர முனிவிற் றான்போய் முனிவன முன்னி னானால்.
 
554.விண்ணுயர் விளங்கு கோட்டு விடுசுடர் விளங்க மாட்டாக
கண்ணுயர் கதலி வேலிக் கார்க்கயி லாய நெற்றிப்
புண்ணியக் கிழவன் போகிப் பொலங்கலம் புலம்ப நீக்கித்
திண்ணிய தியானச் சோதிச் செஞ்சுடர் திகழ நின்றான்.
 
555.கழலணிந் திலங்கு பாதங் கலந்தன கருங்கட் புற்றத்
தழலணிந் தெழுந்த வைவா யருமணி யாடு நாகம்
பொழிலணிந் தெழுந்த வல்லி புதைந்தன பூமி நாதன்
குழலணிந் தெழுந்த குஞ்சி குடைந்தன குருவிக் கூட்டம்.
 
556.அருமுடி யரசர் தாழ்ந்த வடிமிசை யரவ மூரக்
கருவடி